Pages

Friday 29 March 2013

ஓயாத அலை




நினைவுகளில் நெகிழ்ந்து

சிறகொடிந்த பறவையொன்று

சரி பார்க்க துடிக்கின்றது

தன் சிறகுகளை...

ம்..சற்று காலமெடுக்கலாம்



நீண்ட இரவுகள் திடுக்கிட்டு

எழ வைக்கும் சப்தங்கள்

மகிழ்ந்திருந்த தருணங்கள்

ஆன்மாவில் கலந்து கண்ணீராய்

காலத்தால் மறைந்து விட்ட வாக்குகள்

வெற்றுபார்வையில் கண்ட முகம்

மறக்க விடை தேடும் விடிவுடன்...




சிப்பியின் ஓடு திறந்து ஒளிரும் 
முத்துப் போன்றதாக இருந்த உறவு கனவாகி...
உணர்வுகள் ஊமையாகி

மனதில் பட்ட காயத்தின் வலி மறைய

தனி மரம் என்னுடன் பயணிக்க

தன்னம்பிக்கை கரம் நீட்டுகின்றது....





காதலின் வலிகளுடன் கரையை தேடி

இருளூடே தெரியும் ஒளியில்

அலை அடிக்கும் வழியில்

கலங்கரை விளக்கைதேடி

காலூன்ற அதிக காலம்

எடுக்கப்போவதில்லை....





 ஓயாத அலையாய்
நெடுந்தூரப் பயணம்

சிறகடித்து பறக்கும்

ஒற்றைக் குருவியான

பறவையின் கூக்குரலை

உயிரினில் கலந்த வலியை

மாற்ற வழியை தேடும்

அலைகள் ஓயப்போவதில்லை...!

---தாரிணி---








2 comments:

  1. சிப்பியின் ஓடு திறந்து ஒளிரும்
    முத்துப் போன்றதாக இருந்த உறவு கனவாகி...
    உணர்வுகள் ஊமையாகி ...

    உணர்வுகளை ஊமையாக்கிய வரிகள் சிறப்பு சகோ.

    ReplyDelete
  2. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு சசிகலா

    ReplyDelete