Pages

Sunday 31 March 2013

நிமிர்ந்து நில்லடி பெண்ணே!

கவிஞர் என்று சொல்லிடுவார்,
கதை பல பேசிடுவார்,
இளைஞர் என்று கூறுவார்,
இன்னல் பல தந்திடுவார்
உன்னைப் போல் அழகி இல்லை என்பார்,
உன்னை விட்டால் யாரும் இல்லை,
நீ இல்லாமல் நான் இல்லை,
உலகில் வாழப் பிடிக்கவில்லை,
நீ கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வேன்
என்று எல்லாம் கூறுவார்,
இனிக்க இனிக்கப் பேசி உன்னை வீழ்த்துவார்,
அன்பு மழையில் உன்னை நனைய வைப்பார்,



வானில் இருக்கும் நிலா வேண்டுமா,
தேனில் ஊறும் பலா வேண்டுமா,,
நீ கேட்டதெல்லாம் உனக்குக் கிட்டிடும்,
எல்லாம் நீ கிடைக்கும் வரை,
உன்னை அடையும் வரை,
ஓடி ஓடி வந்து சேவை செய்வார்,
பின் வேட்கை தீர்ந்ததும் ஓடி விடுவார்,
ஜாக்கிரதையடி பெண்ணே,


சுற்றிச் சுற்றி வருவது காம வேட்கைக்கு,
பின் தன்னிலை திரும்பும்போது,
ஏமாற்றி விடுவார், பெண்ணே,



இச்சையை உண்மையான காதல்
என்று நம்பி விடாதே,பொய்
இனிப்பாக இருக்கும்,
உண்மையான, பண்பான காதல் எதையும் எதிர்பார்க்காது,
அவசரப் படாதே பெண்ணே,
உன்னை வித விதமான வார்த்தையால்
மயக்குவார்,கற்பென்றும் பெரிதாம்,
அதை இழந்தால் உடலால் மட்டும் அல்ல,
உள்ளத்தாலும் பெரும் போராட்டம்,
நிமிர்ந்து நில்லடி பெண்ணே!

No comments:

Post a Comment