ஊமையாய் என்னுள் உறங்கி கிடந்த
உணர்வின்
பிரதிபலிப்பாய்
தொலைவில் தெரிந்த
விளக்காய்
அனுதினமும்
அவ்வொளியை
தேடிய -என் ஆத்மாவில்
பிரமிப்படைந்து
சங்கமிக்கின்றேன்
அந்த ஒரு அதிசய
ஊற்றில்...
மகிழ்ச்சி எனும் பட்டாடையை
போர்க்கின்றேன்
மனதில் அவனைப்போல்
உடலிலும் தழுவிச்செல்லும்
அவன் ஸ்பரிசம்
உணர்கின்றேன்
உறுதியாய்
இறுதிவரை
பயணிப்பேன்
இப்பாதையில் என...
வரண்டு கிடந்த நிலமாய்
வெடித்த செம்மண்
இடையே
புத்தம் புது ரோஜா
பூத்தது
போல் ஓர் அதிசயமாய்...
அன்பெனும் உணர்வு
அகலாத பாசமாய்..
வடுக்களுடன் போராடும்
வலியை
அறிந்து காயத்தை
சிறகினால் வருடிட
வந்த ஓர் உணர்வாய்...
கண்களால் எனை
விழுங்கிய அவனின்
காதல் ஸ்பரிசம்
என்னுள் ஏற்படுத்திய
தீயில் உருகி ஊறி
வடிந்த ரசமாய்
அனல் கொதிக்க
அடைக்கலமானேன்
அவன் கூட பயணிக்க...!
---- தாரிணி----
No comments:
Post a Comment