என் பிறப்புக்கு உயிர் தந்து
என் உடலுக்கு உணர்வு தந்து
எனக்குள் உறைந்து
என்னை ஆள வந்து
என்னை உன் நினைவினிலே
சஞ்சரிக்க வைத்த
என்னவனே.....
பெண்மையின் இரகசியங்களை
அறிந்து அவளை பொக்கிஷமாய்
மலர வைக்கும்
உன் ஆண்மையின் வசமாகினேன்...
உன் பாத கமலங்களில்
சமர்ப்பிக்கப்பட வேண்டிய
பிரத்தியேக மலராக மலர்ந்து
மகரந்தம் நிறைந்து
எழிலோவியமாக மிளிர்ந்து
அர்ப்பணிப்புக்கு தயாராக இதோ இங்கு நான் ...
---தாரிணி ---
No comments:
Post a Comment