அன்பான அதிர்ஷ்டமான
அறிவான செல்வக்குழந்தையாக
எல்லா உறவுகளின்
எதிர்பார்ப்பில் இப்பூமியில்
உதித்தேன்
காலத்தின் சதியால்
எல்லா உறவுகளூம்
என்னை விட்டுப் பிரிந்துப் போயின…..
அன்புக்கு மட்டுமே
ஏங்கிய நான்
நிஜத்தை தேடி
உண்மையை தேடி
பல மைல்கள் நடந்து
களைப்படைந்தேன்
சில பொய்யான
உறவுகளால் ஏமாந்தேன்
பல நிழல்களை
நிஜமென்று நம்பினேன்
எல்லா உறவுகளூம்
நிழலாகி போனபோது......
நீ என்னுடன் உறவாட வந்தாய்
நிஜமான உறவொன்று
எனக்காக என
உன் உறவை போற்றி
வணங்கி வாழ்ந்தேன்
என் இதயத்தின்
தலைவனாய் - நீ வந்தாய்
இறுதி வரை எனக்கென
நீ இருப்பாய் என்றெண்ணி
மனமகிழ்ந்திருந்தேன்
ஆனால்.. நீயோ....
உன் தேவைகளுக்காக
உன் ஆறுதலுக்காக
உன் விருப்பங்களுக்காகத்தான்
என்னுடன்
உறவாடினாய் என அறிந்தேன்
விடை பெறாமலே நீ
சென்று விட்டாய்.....
அப்போது தான் அறிந்தேன்
எல்லா உறவுகளூம்
ஏதோ ஒன்றை
எதிர்பார்த்துதான் வருகின்றது
அதில் நீயும் விதி விலக்கல்ல...
நிஜம் எது நிழல் எது
என்று தெரியாமல்
ஏமாந்து நிற்கிறேன்
இன்று வரை...
உன்னை என் இதயத்தில்
சுமந்து...
--தாரிணி---
ஏதோ ஒன்றை
ReplyDeleteஎதிர்பார்த்துதான் வருகின்றது
அதில் நீயும் விதி விலக்கல்ல...
உண்மையான வார்த்தைகள்!
மிக்க நன்றி ஆகாஷ். உங்களின் வருகைக்கு நன்றி
Deleteதலைப்பே வலியை உணர்த்தியது சகோ.
ReplyDeleteமுகநூல் தாரணியா நீங்க ?
This comment has been removed by the author.
Deleteமிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கு. ஆமாம் நான் தாரிணி தான்
ReplyDelete